விஸ்வப்ராமணர்களுக்கு இனிய வணக்கத்துடன் மகேஷ் ஆச்சார்யா.  ….

விஸ்வகுல ஜவர்ண அநுமக்கொடீ.. ……

529868_287671768027817_382016597_n

வாயுபகவானுக்கும் , பதிவிரதையுமான அஞ்சனா தேவிக்கும் ஜனித்த அநுமன் தன் கர்ப்பகாலம் முடிந்தும் குழந்தை பிறவாமல் தாமதமாகி வேதனைப்படும் தன் மனைவியை கண்ட வாயுபகவான் ஏதும் தோன்றாதவராகி மும்மூர்த்திகளையும் வேண்ட அவர்களாலும் இயலாது போகவே இது ஏதோ ” தேவரகசியமாக” இருக்கும் என்று எண்ணிய மும்மூர்த்திகள் ப்ரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளையும் சிருஷ்டீத்து காக்கும் ஸ்ரீ விஸ்வப்ரம்மாவை தியானித்தார்கள்.

ஸ்ரீ விஸ்வப்ரம்மா தோன்றி அஞ்சனாதேவியின் முர்ச்சையை சஞ்சீவ மூலிகைகளால் தெளிவித்து சிசுவை நோக்கி ” வெளிவர ஏன் ? தாமதமெனக்” கேட்க அச்சிசு ” ஓ! விஸ்வகர்ம பரம்பொருளே ! நமஸ்கரிக்கின்றேன் . நான் என் மாதாவின் கருவறையில் நிர்வாணமாக இருக்கின்றேன். அப்படியே நான் வெளிவந்தால் மிகுந்த பாதகனாவேன். ஆகையால் எனக்கு பொன்னாலான கெளபீனத்துடன்( கோமனம்) ,பொற்பூணூல் , குண்டல , கமண்டலங்களுடன் என் உடல் பருமனையும் குறைத்து என் அன்னைக்கு வேதனையின்றி நான் வெளிப்பட அநுக்கிரகம் செய்ய வேண்டும்”.

இதனால் நான் நன்றி மறவாமல் உமக்கு என்றென்றும் நன்றி உடையவனாக உமது துவாஜத்தில்(கொடீயில்) இருப்பேன்” எனவும் குழந்தை சத்தியம் செய்தது.

இதைகேட்ட ஸ்ரீ விஸ்வப்ரம்மா மனமகிழ்ந்து அஞ்சனை வயிற்றில் பிறந்ததால் ஆஞ்சநேயர் என்றும் சஞ்சீவ மூலிகைகளால் மயக்கம் தெளிந்து பேசியதால் சஞ்சீவராயன் எனவும் பெயர் அணிந்து மரண பயமின்றி சிரஞ்சீவியாக வாழ்வாய் என ஆசிர்வதித்து அருளினார்..

ஸ்ரீ விஸ்வப்ரம்மாவிற்கு அளித்த சத்திய வாக்குபடீயே அநுமன் விஸ்வகர்மாவின் கொடீயில் ஆரோகணித்தார். இதுவே அநுமர் விஸ்வகுல கொடீயில் இருக்கும் காரணமாகும்.

இதை ” ஸ்காந்தம் நாகரகாண்டம் விஸ்வகரமோ பாக்யானத்தில் ” கூறப்பட்டுள்ளது.

இத்துடன் கம்ப ராமாயண உத்திரகாண்டத்தில் அநுமப் படலத்தில் ஸ்ரீ விஸ்வப்ரம்மா அநுமனுக்கு வரம் அளித்ததை கூறுமிடத்தில் “வாதாமகன் சாவொழிகவென வானோர் தச்சன் வரங்கொடுத்தான்” என்பதாலும் ,

விஸ்வபுராணம் பஞ்சகிருத்திய காண்டத்தில் ‘ அடுக்கிய அகழி சூழ்ந்த அழகுள்ள சிகரிதோறும் கொடுத்திடும் வானமுட்ட வனுமந்தத் துவஜ நாட்டி ” என்பதாலும் ஸ்ரீ விஸ்வகர்ம, அநுமன் தொடர்பும் ” விஸ்வகுல அநுமக்கொடீ பற்றியும் அறியப்படுகிறது..

நன்றி நண்பர்களே.. ஜெய் விஸ்வகர்மா.

Thanks With Regards

Mahesh Acharya

http://www.facebook.com/MaheshAchaarya